Monday 27 February 2017

After Kamal, Vairamuthu now its actor Vivek's turn

After Kamal, Vairamuthu now its actor Vivek's turn
After Kamal, Vairamuthu now its actor Vivek's turn
கமல், வைரமுத்துவைத் தொடர்ந்து கவிதை எழுதிய நடிகர் விவேக்  
சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் எழுதிய விமர்சனக்கவிதை, அணுகுண்டு கவிதை என பல கவிதைகள் வளம் வரத் தொடங்கி உள்ளன. முன்னர் கமலும், வைரமுத்துவும் தங்கள் பெயரில் வெளியான கவிதைகளைத் தாங்கள் எழுதவில்லை என விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் விவேக் பெயரில் ஒரு சிறு கவிதை வளம் வர தொடங்கியுள்ளது. அந்த கவிதை இதோ..
காளைக்காக அன்று வாடிவாசல் !
கழனிக்காக இன்று நெடுவாசல்!
திறக்கட்டும் அரசின் இதயவாசல்!
அதுவரை உழவனின் வாழ்வு ஊசல்.


இது உண்மையிலேயே நடிகர் விவேக் எழுதியது தானா என நாம் விசாரணையில் இறங்கியபோது தான் உண்மை புரிந்தது. இந்த கவிதையை நடிகர் விவேக் அவர்களே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டு நெடுவாசலில் தொடங்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தன் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னரும் ஜல்லிக்கட்டு போராட்ட சமயத்தில், இளைஞர்களுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வந்திருந்தார் விவேக்.

Recently actor Kamal and lyricist Vairamuthu have clrafied that some false poems criticizing the Government are circulating in social medias in their names. Actor Vivek has written a small poem and showed his support for the protest in Neduvasal by youngsters.

No comments:

Post a Comment