Tuesday 28 February 2017

Dhanush appeared in court | கோர்ட்டில் ஆஜரான நடிகர் தனுஷ்

Dhanush appeared in court | கோர்ட்டில் ஆஜரான நடிகர் தனுஷ்
Dhanush appeared in court |  கோர்ட்டில் ஆஜரான நடிகர் தனுஷ் 
தமிழ் சினிமா நடிகர், நடிகையர், இயக்குனர்கள் எத்தனையோ வழக்குகளை பார்த்திருப்பார்கள். ஆனால், நடிகர் தனுஷ் மற்றும் அவர் குடும்பத்தின் மீது போடப்பட்டிருக்கும் வழக்கு நிச்சயம் புதுமையானது. நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்றும், சிறு வயதில் சினிமா ஆசையில் ஊரைவிட்டு ஓடிப்போனார் என்றும், தாங்கள் வறுமையில் வாடுவதாகவும், தங்களின் பராமரிப்பிற்காக மாதம் 65000 வழங்கவேண்டும் எனவும் ஒரு தம்பதியினர் தனுஷ் மற்றும் அவர் குடும்பம் மீது வழக்குப் போட்டிருந்தனர். 

இந்நிலையில் அந்த வழக்கின் விசாரணை நேற்று மதுரையில் நடைபெற்றது. வழக்கில் குறிப்பிடப்பட்டது போன்ற அங்க அடையாளங்கள் தன்னுடைய உடலில் இல்லை என்பதை நிரூபிக்க நடிகர் தனுஷ் கோர்ட்டில் நேரடியாக ஆஜர் ஆகி இருந்தார். பின்னர், அந்த தம்பதி தாக்கல் செய்திருந்த ஆவணங்களின் படி தனுஷின் உடலின் ஒரு தழும்பும், மச்சமும் உள்ளதா என்பதை ஆராய்ந்து பார்த்து கோர்ட்டுக்கு அறில்க்கை கொடுத்துள்ளனர். அந்த அடையாளங்கள் ஏதும் தன்னுடைய உடலில் இல்லை என்று தனுஷும் நிரூபித்தார். ஆனாலும் இந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு அழங்கப் படவில்லை. 

Actor Dhanush has appeared in Madrai court on a case that is filled against him. The petitioner has claimed that Dhanush is their son who moved to Chennai to become an actor. Dhanush was asked to appear in the court and prove that the physical marks in the body are not matching as per the file. Reportedly those mole and scar was not found in Dhanush's body. However, the verdict is still reserved. 

No comments:

Post a Comment