Wednesday 8 March 2017

OPS slams Vijaybaskar would be the first convict in Jayalalithaa's mysterious death

OPS slams Vijaybaskar would be the first convict in Jayalalithaa's mysterious death
The rebel ADMK leaded and former Chief Minister O Panneer Selvam accused Health Minister Vijayabaskar that he would be the first convict if Jayalalithaa's death probe is initiated. After the hunger strike,  OPS also revealed that he was never allowed to see Jayalalithaa when she was in Apollo Hospital and it was Sasikala who updated them that Jayalalithaa is doing well. He also assured his supported that the fight will continue against Sasikala and her family until justice triumphs in mystery of Jayalalithaa's death. 
ஜெயலலிதா மரணத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் தான் முதல் குற்றவாளி ஓபிஎஸ் தாக்கு 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்றும், மர்மத்தை அறிய விசாரணைக் கமிஷன் வேண்டும் என்பாதை வலியுறுத்தியும் நேற்றைக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் தலைமையில் அதிமுக-ஓபிஎஸ் அணியினர் உண்ணாவிரதம் மேற்கொன்றனர். இதில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பங்குகொண்டு தங்களின் ஆதரவை ஓபிஎஸ் அணிக்கு தெரிவித்தனர். மாலையில் உண்ணாவிரதத்தை முடிக்கையில் தொண்டர்களிடம் ஓபிஎஸ் பேசியதாவது, "குடும்ப ஆட்சியைத் தொடர்ந்து எதிர்த்து வந்தவர் ஜெயலலிதா, ஆனால் அவரது மறைவுக்கு பிறகு இன்று ஒரு தனிப்பட்ட குடும்பம், கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்கிற சூழல் ஏற்பட்டுள்ளது. நமது கட்சியையும், ஆட்சி யையும், அந்த குடும்பத்திடம் இருந்து மீட்டு, மக்கள் இயக்கமாக, மக்களாட்சியாக மாற்ற, தர்மயுத்தம் துவக்கி உள்ளோம்.

தர்மயுத்தத்தின் துவக்கம் தான், இந்த உண்ணாவிரதம். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த, 75 நாட்கள், அவரை பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவருக்கு என்ன தான் நடந்தது; சிக்கலான வியாதி இருந்தால், வெளி நாடு சென்று சிகிச்சை அளிக்கலாம் என, பலமுறை மன்றாடினேன். ஆனால், யாரும் அதைக் கேட்கவில்லை. சமீபத்தில், சுகாதாரத் துறை செயலர் வெளியிட்ட, அரசு அறிக்கை யில், ஜெயலலிதா மரணமடையும் சூழல் இருப்பதாக, எனக்கு தெரிவித்ததாகக் கூறி உள்ளார். எனக்கு, அதுபோன்ற எந்த தகவலும் என்னிடம் தெரிவிக்கவில்லை.

ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்பல்லோ மருத்துவமனையின் இரண்டாவது மாடியில், ஏழு பேரை நிறுத்தி இருந்தார். அவர்கள், அங்கு வருவோர் விபரங்களை குறிப்பெடுத்து, விஜயபாஸ்கரிடம் கொடுப்பர்.

முதலில் எனக்கு தெரியவில்லை. பத்து நாட்களாக, அவர்கள் ஒரே இடத்தில் நிற்பதை பார்த்து, கேட்டபோது தான், விஜயபாஸ்கர் நிறுத்தி வைத்திருப்பதாகக் கூறினர்.'நீதி விசாரணை அமைத்தால், பன்னீர்செல்வத்தை முதலில் விசாரிக்க வேண்டும்' என, விஜய பாஸ்கர் கூறி உள்ளார். நான் தானே, 'நீதி விசாரணை வேண்டும்' எனக் கேட்கிறேன். சி.பி.ஐ., விசாரணை வந்தால் தான், மரணத்தில் புதைந்துள்ள மர்மம் மற்றும் உண்மைகள் தெரிய வரும்.

என்னை விசாரிக்கட்டும்; என்ன நடந்தது என்பதை, நான் கூறுகிறேன். நீதி விசாரணை யில், உண்மை தெரிய வந்தால், முதல் குற்றவாளி விஜயபாஸ்கர் தான். மருத்துவமனையில் ஜெயலலிதா சேர்க்கப்பட்டு, 20 நாட்கள் கழித்தி சசிகலா வெளியே வந்து, 'ஜெயலலிதா நலமாக இருக்கிறார்' என என்னிடம் தெரிவித்தார்.

தங்களுடைய குடும்பத்தில் ஒருவரை கட்சியிலும், ஆட்சியிலும் கொண்டு வர வேண்டும் சதி திட்டம் தீட்டி இருந்தனர் சசிகலா குடுபத்தினர். அது தான் இன்றைக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.அவர்களிடம் இருந்து, அ.தி.மு.க.,வை காப்பாற்ற, இந்த தர்மயுத்தம் துவக்கப்பட்டுள்ளது. சசிகலாவின் பினாமி ஆட்சிக்கு ஆதரவாக, 122 எம்.எல்.ஏ.,க் கள் மட்டுமே உள்ளனர்; ஆனால் ஏழரை கோடி மக்கள் நம்முடன் உள்ளனர். உரிய நீதி விசாரணை வந்தால் மட்டுமே, ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சு விலகும். நீதி விசாரணை வரும் வரை, நமது போராட்டம் தொடரும். இந்த போராட்டம் மக்கள் இயக்கமாக வளரும். சசிகலா குடும்பத்தின் பிடியில் இருந்த ஆட்சியையும் கட்சியும் மீட்கப்படும் என பேசினார்.

இந்த உண்ணாவிரதத்தில் பேசிய, சேதுராமன் மேலும் ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னரே சசிகலாவின் கணவர் நடராஜன், "நாங்கள் விரும்பினால், எங்கள் குடும்ப ஆட்சியைக் கொண்டு வருவோம், குடும்பத்தில் ஒருவரையே முதல்வராக ஆக்குவோம்" என்று செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். இது ஜெயலலிதா மரத்தின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது. லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்திக் கொடுத்து அவர்களது வாழ்வில் அமைதியையும் சந்தோஷத்தையும் உண்டாக்கிய ஜெயலலிதாவுக்கு தன் மறைவுக்குப் பின்னரும் அமைதி இல்லாமல் போனது விதியே. 
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv

Follow us:

Most Viewed Video:
#1. Actor Sivakarthikeyan Exclusive Unseen Video - https://youtu.be/TxvEOmhn09c
#2. Bairavaa Heroine Insults Media People - https://youtu.be/tf5mZVMc3qo
#3. Vijay Speaks Ajith’s Veeram Dialog in Bairavaa - https://youtu.be/e-cNHNpeAYk
#4. Truth behind Mic Mohan’s Deadly diease Rumors - https://youtu.be/qnCgLvvdFnw
#5. Actor Vivek Insults Sivakarthikeyan - https://youtu.be/KxXcjk0QbGM
#6. Lakshmi Menon Avoided in Tamil Cinema - https://youtu.be/qZJBwjc3piY
#7. Reasons Behind Kamal Haasan & Gautami Emotional Separation - https://youtu.be/1L5sNdRsrbU
#8. Celebrities and their Previous Jobs | Jobs Before Acting - https://youtu.be/cPQbQN-Lc_Y
#9. Dindigul L.Leoni Effective Comedy Speech at Mupperum Vizha - https://youtu.be/jjaa5venz48
#10. Actress Revathi’s Past Husband acting in Surya’s Next Movie - https://youtu.be/IfBKTkJNW-M
#11. Kollywood Actors Real Age and Date of Birth - https://youtu.be/t_tYGH-S7cY
#12. Thala Ajith Behind Sivakarthikeyan Success Emotional Speech from Siva- https://youtu.be/rfVev8GwLK4
#13. Nayanthara’s Master Plan Against Vijay - https://youtu.be/3kW9YxjiFWA
#14. Dhanush- Who Are The Real Parents - https://youtu.be/Bu6chGRs_1M
#15. Rangaraj Pandey Interview with TN CM Jayalalithaa’s Niece Deepa - https://youtu.be/eSmFkMJXfHE

No comments:

Post a Comment