Sunday 12 February 2017

Tamil Cinema's Top 5 love couples

Tamil Cinema's Top 5 love couples
Tamil Cinema's Top 5 love couples
தமிழ் சினிமாவின் டாப் 5 காதல் ஜோடிகள் 
தமிழ் படங்களில் காதலை எப்படி நீக்கமுடியாதோ அப்படித் தான் தமிழ் நடிகர்களின் காதலும். தமிழ் சினிமாவின் ஆரம்பத்திலிருந்தே நடிகர், நடிகைகள் காதலில் வீழ்வதும், சேர்ந்து வாழ்வதும், பிரிவதும் என தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆண், பெண் இருவருமே பிரபலங்களாக இருந்து காதலில் வீழ்ந்து, திருமண பந்தத்தில் இணைந்து அன்பும், மகிழ்ச்சியாக வாழும்  தமிழ் சினிமாவின் டாப் 5 காதல் ஜோடிகள் இதோ..
1.சூர்யா-ஜோதிகா 
கிட்டத்தட்ட இருவருமே ஒரே காலகட்டத்தில் தான் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தனர். இருவரும் ஒன்றாய் நடி5த்த முதல் இரண்டு படங்கள் பெரும் வெற்றி பெறவில்லை எனினும், இவர்களின் ஜோடி ரசிகர்களை கவர்ந்தது. ஹிட் கொடுப்பதில் சூர்யா தடுமாறிக் கொண்டிருக்கும் போது காக்க காக்க படத்தில் மீண்டும் இணைந்தனர். காதலும் பற்றிக் கொண்டது. 2006-ல் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு தியா,தேவ் என இரண்டு குழந்தைகள். ஜோதிகாவை மீண்டும் நடிக்க வைக்க தன் தயரிப்பிலேயே படங்கள் எடுத்து உறுதுணையாய் இருக்கிறார் அன்புக் கணவர் சூர்யா. எத்தனை காதல்கள் தமிழ் சினிமாவில் வந்தாலும் இவர்களின் காதல் என்றைக்கும் ஸ்பெஷலானது.

2.அஜித்-ஷாலினி 
இவர்கள் இருவரும் இணைந்து நடித்தது அமர்க்களம் எனும் ஒரே படம் மட்டுமே. ஷாலினியைப் பார்த்தே முதல் நாளே காதலில் வீழ்ந்தார் அஜித், பின்னர் இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் கரம் ஷாலினியின் பற்றினார். திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிப்பதை  நிறுத்திக் கொண்டார் ஷாலினி. இருந்தாலும், பேட்மிட்டன் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்று மாநில அளவில் பரிசுகளை குவிக்க ஊக்கப் படுத்திவருகிறார் அஜித். வெளிநாடுகளில் ஷூட்டிங் நடந்தாலும் அன்பு மனைவியை உடன் அழைத்து சென்றுவிடுகிறார் அஜித். பலருக்கு ஆஸ்தான ஜோடியான இவர்களுக்கும் இரண்டு குழைந்தைகள் உள்ளனர். 

3.மணிரத்னம்-சுஹாசினி 
ஒன்றாக பணிபுரியாமலே காதல் வயபப்ட்டு சந்தோஷமாக திருமணத்தில் இணைந்த ஜோடி என்றால் அது மணிரத்னம் சுஹாசினி ஜோடி தான். மணிரத்னத்தின் படங்களை போலவே அவரும் மிகவும் ரொமான்டிக் ஆனவர். தன்னைப் போலவே தன் துணையும் தங்கள் துறையில் பிரகாசிக்க ஒத்துழைப்பைத் தருகின்றனர் இருவரும். கணவன் மனைவிக்காக வரையறையை இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம் என சில நட்சத்திரங்களே சொல்வது இவர்களின் பெருமைக்கு சான்று. ஒரே ஒரு மகன் மட்டும் இந்த காதல் ஜோடிக்கு, தந்தையைப் போல அவரும் இயக்குனராகும் முயற்சியில் உள்ளாராம். 

4.சுந்தர்.சி-குஷ்பூ
இயக்குனர் - நடிகை காதலர்கள் வரிசையில் யாரும் எதிர்பாரா வகையில் இணைந்த ஜோடி இவர்கள். தன முதல் படத்தை இயக்கிக் கொண்டிருந்த சுந்தர்.சி படத்தின் நாயகி குஷ்பூ அப்போதைய நம்பர் 1 நடிகை. சுந்தரின் இயல்பை பார்த்து முதலில் காதலில் வீழ்ந்தது குஷ்பூ தான். மதம், மொழி என பல்வேறு பிரச்சனைகள் கடந்து தங்களின் காதலின் வெற்றிக்கு கோடியை நாட்டினர். இன்றைக்கும் டிவி, அரசியல் என குஷ்பூ ஆக்ட்டிவாக இருக்க ஊக்கம் அளிப்பதே சுந்தர் தான். அவந்திகா, ஆனந்திக்கா என இரண்டு குழைந்தைகள் உள்ளனர் 

5.ராம்கி-நிரோஷா 

தமிழ் சினிமாவில் 90களில் பரபரப்பாய் பேசப்பட்ட காதல் இவர்களுடைய காதல். எனினும், அவற்றை எல்லாம் மறுத்தே வந்தனர் ராம்கியும் நிரோஷாவும், இறுதியில் ணொவரும் எதிர்பார்த்தது போன்றே காதல் திருமணத்தில் இணைந்தனர். இவர்களுக்கும் இரண்டு குழைந்தைகள் உள்ளனர். இருவரையும் இணைந்தே தொலைகாட்சி தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகின்றனர். 
Love and Tamil Cinema are inseparables. Let's see the top 5 love couples who made it successful until today

1.Surya-Jothika - Both started their career at the same time. The duo became an instant after their first movie together. They tied the knot in 2006 and happily having 2 kids.

2.Ajith-Shalini - Their only film together 'Amarkkala' was a super hit so was the pair. Ajith fell in love on the very first day of the shoot. Ajith had to convince both the families prior their marriage, they also have 2 kids.

3Mani Rathnam-Suhasini - They both didn't work together before their marriage. It's a kind of arranged marriage, but the love they both have for each other is remarkable. They have a son, who is also planning to become a director

4.Sundar.C-Kushboo - It was Sundar's debut movie and Kushboo was the leading star. Kushboo fell in love with Sundar's jovial character and proposed him first. After lots of twists and turns, they hitched and 2 daughters.

5.Ramki-Nirosha - Back in 90's they were quite hot couple in the industry. They kept denying the rumours, but at the end they got married and living happily with 2 children now.

No comments:

Post a Comment