Wednesday 19 July 2017

PC Sreeram walks out of Vijay Sethupathi Movie


PC Sreeram walks out of Vijay Sethupathi Movie
PC Sreeram walks out of Vijay Sethupathi Movie
விஜய்சேதுபதி படத்தில் இருந்து வெளியேறிய பி.சி.ஸ்ரீராம்
கடந்த எட்டு வருடங்களில் ஆறு படங்களுக்கு மட்டுமே ஒளிப்பதிவு செய்யும் அளவுக்கு செலக்டிவான படங்களில் மட்டுமே ஒளிப்பதிவாளராக பொறுப்பேற்றிருக்கிறார் .சி.ஸ்ரீராம். அதில் பெரிய படம், சின்னப்படம் என்கிற பாகுபாடு எல்லாம் அவர் பார்ப்பதில்லை. கடைசியாக தமிழில் அவரது ஒளிப்பதிவில் வெளியான மணிரத்னத்தின் ' காதல் கண்மணி' மற்றும் சிவகார்த்திகேயனின் 'ரெமோ' என இரண்டு படங்களும் அவரை பொறுத்தவரை ஒன்றுதான். அந்தவகையில் தான் 'ஆரண்ய காண்டம்' தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் நடிக்கும் 'அநீதிக்கதைகள்' என்கிற படத்திற்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார்.

ஆனால் தற்போது அந்தப்படத்தில் பாதியில் இருந்து வெளியேறி இருக்கிறார் பி.சி.ஸ்ரீராம். படக்குழுவினருடன் மனஸ்தாபம் என தவறாக நினைத்துவிட வேண்டாம். படம் பாதி முடிந்த நிலையில் சில காரணங்களால் 'அநீதி கதைகள்' படத்தின் மீதி படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போனதால், தேதி பிரச்சனை காரணமாக தற்போது அதிலிருந்து விலகி 'ரெமோ' தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் புதியவரான பிரபு ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் நிவின்பாலி நடிக்கவுள்ள படத்திற்கு சென்றுவிட்டார் பி.சி.ஸ்ரீராம்

No comments:

Post a Comment