Wednesday 19 July 2017

Vijay Sethupathi gives chance again and again


Vijay Sethupathi gives chance again and again
Vijay Sethupathi gives chance again and again
மீண்டும் மீண்டும் வாய்ப்பு தரும் விஜய் சேதுபதி
தன்னுடைய நண்பர்களுக்கும், ஆரம்பகாலத்தில் தனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர்களுக்கும் மறுவாழ்வு கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் விஜய்சேதுபதி. அவரை வைத்து 'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' ஆகிய படங்களை இயக்கியவர் அருண் குமார்.
இந்த இரண்டு படங்களுமே கமர்ஷியலாக பெரிய வெற்றியடையவில்லை. எனவே அடுத்து படம் கிடைக்கவில்லை. எனவே மீண்டும் அவரது இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க முன்வந்தார் விஜய்சேதுபதி. அருண்குமார் இயக்கத்தில், விஜய்சேதுபதி மூன்றாவது முறையாக நடிக்கும் இந்த படத்தை 'கே.புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது
சமீபத்தில் வெளியான 'பாகுபலி-2' படத்தின் தமிழக உரிமையை வாங்கி வெளியிட்ட நிறுவனம் இது. அடுத்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்-2' ஆகிய படங்களையும் இந்நிறுவனம்தான் வெளியிடவிருக்கிறது

இதுவரை திரைப்பட விநியோகத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இந்த நிறுவனம், இப்போது விஜய்சேதுபதி நடிக்கும் படம் மூலம் படத்தயாரிப்பிலும் கால் பதிக்கிறது

No comments:

Post a Comment